நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் முருகேசன் என்பவர் ஒரு பாபா கோயிலை உருவாக்கி நிர்வகித்து வருகிறார். அந்த கோவிலுக்கு பக்தர் கூட்டம் ஒன்றும் பெரிதாக வரவில்லை. என்ன செய்வது என்று யோசித்த முருகேசனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
இந்த விவகாரம் வெளியே தெரியவர பக்தர் கூட்டம் பெருகியது. தொலைக்காட்சி சேனல்களும் அங்கு சென்று பாபாவை படம் பிடித்தனர். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முருகேசன் “எனக்கு இதுவரை பாபா 4 முறை காட்சி கொடுத்திருக்கிறார். நான் விரைவில் ஒரு சித்தர் வடிவில் உன் கோவிலுக்கு வருவேன் என்று என்னிடம் கூறியிருந்தார். இன்று இவர் வந்துள்ளார். பாபாதான் இவர் வடிவில் வந்துள்ளார்” என்று அள்ளிவிட்டார்.
இந்நிலையில், அங்கு வந்த ஒருவர், இவர் பாபா இல்லை, குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகே இவர் பிச்சை எடுப்பதை நான் பார்த்திருக்கிறேன் என்று கூற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கூட்டம் அங்கிருந்து கலைய தொடங்கியது.