விடுதலைப் புலிகள் குறித்து தவறாக பேசியதாகக் கூறி, சென்னையில் நடிகை நக்மா மற்றும் குஷ்பூ ஆகியோரின் உருவ பொம்மையை எரித்து, தமிழர் முன்னேற்றப் படை அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய போது விடுதலைப் புலிகள் குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து, இன்று சென்னையில் தமிழர் முன்னேற்றப் படை அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
தமிழர் முன்னேற்றப் படை அமைப்பினர் சென்னை நுங்கம்பாக்கம் அருகே உள்ள மகாலிங்கபுரத்தில் நடத்திய இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நடிகைகள் குஷ்பூ மற்றும் நக்மாவின் உருவ பொம்மையை எரித்தனர்.