நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியிலிருந்து இன்று காலை 3 படகுகளுடன் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இந்நிலையில், அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருக்கும் போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்ததாக சொல்லி, 29 மீனவர்களையும், 3 படகுகளையும் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.
இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் நாளை புதுக்கோட்டை மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.