மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ் பஸ்ஸில் ஏறவில்லை: ஓபிஎஸுக்கு ஆதரவு?

வியாழன், 9 பிப்ரவரி 2017 (19:15 IST)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தற்போது அதிமுக கட்சி இரண்டாக உடைந்து நிற்கிறது. ஒரு பக்கம் சசிகலாவும் இன்னொரு பக்கம் பன்னீர்செல்வமும் நேருக்குநேர் மோதி வருகின்றனர்.


 
 
இந்த சூழலில் தான் முதல்வராக அதிமுக எம்எல்ஏக்களை சொகுசு பேருந்தில் அழைத்து சென்று நட்சத்திர விடுதி ஒன்றில் அடைத்து வைத்துள்ளார் சசிகலா என பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் சசிகலா பக்கம் இருக்கும் ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சமாக பன்னீர்செல்வம் பக்கம் வர ஆரம்பித்துள்ளனர்.
 
கடத்தப்பட்ட எம்எல்ஏக்கள் தப்பித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சசிகலா அணியில் இருந்த மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜன் சசிகலா தரப்பு எம்எல்ஏக்களை பஸ்ஸில் ஏற்றிய போது ஏறவில்லையாம். அவர் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்