நடிகை மனோராவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஞாயிறு, 11 அக்டோபர் 2015 (23:44 IST)
நடிகை மனோரமா மறைவிற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளார் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ் திரையுலகில் அனைவரின் அன்பையும் பெற்று பிரபல நடிகையாகவும், மனித நேயமிக்கவராகவும் திகழ்ந்த "ஆச்சி" மனோரமா இன்று நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். அவரது திரையுலகப் பணி அனைவர் மனதிலும் நீங்கா இடம்பெறுவது மட்டுமின்றி, வருகின்ற தலைமுறை போற்றிப் பாராட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது.
 
கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மிகுந்த படைப்பாளியாக திகழ்ந்த அவர், திரையுலகில் தனி முத்திரை பதித்தவர். அந்த பெருமைக்குரிய மகளை இழந்து தமிழகம் தவிக்கிறது. அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இந்த துயரமான தருணத்தில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்