வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு… குடும்பத்தோடு காத்திருந்த முத்தரசன்!

செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (08:37 IST)
திருத்துறைப் பூண்டியில் வாக்குப்பதிவு எந்திரக் கோளாறு காரணமாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன் வாக்களிக்க காத்திருந்தார்.

தமிழகத்தில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடந்து வருகிறது.  அரசியல் தலைவர்கள் எல்லோரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் திருத்த்துறைப் பூண்டியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் வாக்களிக்க சென்ற போது எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 15 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் முத்தரசன் குடும்பத்தினருடன் காத்திருந்து வாக்களித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்