சிஏஏவுக்கு எதிர்ப்பு; ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி

Arun Prasath

சனி, 18 ஜனவரி 2020 (12:42 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி இஸ்லாமியர்கள் பேரணி நடத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக பல மாநிலங்களில் எதிர்கட்சிகள் பேரணிகளையும் நடத்தி வருகின்றனர்.

மாணவ அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா, பாஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கு எதிராக ஆளுநர் மாளிகையை நோக்கி
இஸ்லாமிய அமைப்பான SDPI பேரணியில் ஈடுபட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்