ஆத்தூர் அருகில் கீரனூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி. கட்டிடத் தொழிலாளி. இவரது மகன் காமேஸ்வரன்(8). இங்குள்ள இந்து துவக்கப் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். மதியம் 1.45க்கு காமேஸ்வரன் பள்ளி விட்டு திரும்பியபோது அவரது தாய் டெய்சிராணியின் சகோதரி பேச்சி அம்மாள்(30) காமேஸ்வரனை பிடித்து வீட்டிற்கு அழைத்து சென்று அவரது கையை கட்டி அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்திருக்கிறார்.
சிறுவன் அருகிலுள்ள கோவிலில் சர்க்கரை பொங்கல் வாங்கி வந்ததாகவும் அதனை அவரது வடக்கு தெருவிலுள்ள ஆச்சிக்கு கொண்டு சென்ற போது அங்கிருந்த பேச்சி அம்மாள் தனக்கும் வாங்கி வரக்கூறியதாக கூறப்படுகிறது. அதற்கு காமேஸ்வரன் மறுத்ததால் மன நலம் பாதிக்கப்பட்ட பேச்சி அம்மான் கையை கட்டி தீவைத்து விட்டதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.