8ஆம் வகுப்பு மாணவனை, வகுப்பறையில் புகுந்து, வெட்டிக் கொலை செய்த முன்னாள் மாணவன்

வெள்ளி, 28 நவம்பர் 2014 (12:14 IST)
8ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை, வகுப்பறையில் புகுந்து அரிவாளால் வெட்டி சாய்த்து விட்டு முன்னாள் மாணவன் தப்பிவிட்டார்.
 
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அயன்கரிசல் குளம் கிராமத்தைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவன் பாஸ்கரன். இவர் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி அரசு மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்திருக்கிறார்.
 
அவர் இன்று காலை வகுப்பு அறையில் அமர்ந்து இருந்தார். அப்போது அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவன் மாரீஸ்வரன் வகுப்பறைக்குள் புகுந்துள்ளார். வகுப்பு அறையில் திடீரென புகுந்த மாரீஸ்வரன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாஸ்கரனை சரமாரியாக வெட்டியுள்ளார். உடனே மாரீஸ்வரன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
 
இதனால் பலத்தக் காயமடைந்த பாஸ்கரனை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே பாஸ்கரன் பரிதாபமாக உயிரிழந்தார். வகுப்பு அறையில் நடந்த இந்த சம்பவத்தால் பள்ளியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
முன்னாள் மாணவர் மாரீஸ்வரன் மீது, கடந்த ஆண்டு 2 மாணவிகளை  கடத்திச் சென்றதாக பாஸ்கரன் காவல் துறையினரிடம் புகார் செய்திருந்தார். மாரீஸ்வரன் மீது புகார் கொடுத்ததால்  பழிவாங்குவதற்காக பாஸ்கரனைப் பள்ளியில் புகுந்து கொலை செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்