அவர் இன்று காலை வகுப்பு அறையில் அமர்ந்து இருந்தார். அப்போது அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவன் மாரீஸ்வரன் வகுப்பறைக்குள் புகுந்துள்ளார். வகுப்பு அறையில் திடீரென புகுந்த மாரீஸ்வரன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாஸ்கரனை சரமாரியாக வெட்டியுள்ளார். உடனே மாரீஸ்வரன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
முன்னாள் மாணவர் மாரீஸ்வரன் மீது, கடந்த ஆண்டு 2 மாணவிகளை கடத்திச் சென்றதாக பாஸ்கரன் காவல் துறையினரிடம் புகார் செய்திருந்தார். மாரீஸ்வரன் மீது புகார் கொடுத்ததால் பழிவாங்குவதற்காக பாஸ்கரனைப் பள்ளியில் புகுந்து கொலை செய்துள்ளார்.