கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில், தமிழகத்தில் இருந்து சென்ற ஐந்து கூலித்தொழிலாளர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ராஜேந்திரன் அளிக்கும் பணத்தில் முறைகேடு செய்வதாக கூறி பிற தொழிலாளிகளிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆத்திரமடைந்த 15 தொழிலாளிகள் ஒன்று சேர்ந்து ராஜேந்திரனையும், அவரது குடும்பத்தாரையும் வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர்கள் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் (35), சிவம்மா (35), ராஜம்மா (35), காசி (40), ரோஜா (11) உள்ளிட்ட ஐந்து பேர்.