இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடை பெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் மவுலிவாக்கம் கட்டட விபத்து தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கவுல் ரெகுபதி தலைமையிலான ஒரு கமிஷனின் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, இந்த சம்பவத்தின் காரணம் குறித்தும், விபத்திற்குப் பிறகு தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு, நிவாரண உதவிகள், ஆய்வு நடவடிக்கைகள், கட்டட உரிமையாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விரிவான அறிக்கையை வரும் டிசம்பர் 4 ஆம் தேதியன்று தாக்கல் செய்ய வேண்டுமென்ன்றும் கூறி, வழக்கை நீதிபதி அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.