அன்னை தெரேசாவின் அயராத உழைப்பு நமக்கெல்லாம் மிகச் சிறந்த உத்வேகமாகும்: மு.க.ஸ்டாலின் புகழாரம்

வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (06:03 IST)
அன்னை தெரேசாவின் அயராத உழைப்பு, நமக்கெல்லாம் மிகச் சிறந்த உத்வேகமாகும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
அன்னை தெரேசாவின் 105ஆவது பிறந்த நாளில் அவரை நாம் நினைவில் கொள்வோம். அவர் நிறுவிய ‘மிஷனரிஸ் ஆப் சேரிட்டி’ இன்று உலகம் முழுவதும், வெனிசுலா முதல் டான்சானியா வரை, ஏமன் முதல் அமெரிக்கா வரை உலகமே பாராட்டும் வகையில் மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது.
 
தனது வாழ்வின் இறுதிவரை அயராது உழைத்த அன்னை தெரசா தான் எடுத்துக் கொண்ட நோக்கத்தை விட்டு என்றும் விலகியதில்லை. தன்னுடைய கழிவறையை தானே சுத்தம் செய்துகொள்வது, தனது ஆடைகளை தன் கையாலேயே துவைத்துக்கொள்வது என அவருடைய வாழ்நாள் முழுக்க எளிமையை கடைபிடித்தார்.
 
அன்னை தெரேசா அவர்கள். ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தன்னலமற்ற அவருடைய அயராத உழைப்பு நமக்கெல்லாம் மிகச் சிறந்த உத்வேகமாகும் என குறிப்பிட்டுள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்