நீலகிரி மாவட்டத்தில் குந்தா பகுதியில் அரவிந்குமார், திவ்யா ஆகியோர் கணவன் மனைவியாக வாழ்க்கை நடத்திகொண்டிருந்தனர். இவர்களுக்கு ஹரிவாசா என்று 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருந்தது. கணவன் மனைவி இருவருக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் திவ்யா தன் மகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
கணவனை விட்டு பிரிந்த திவ்யா, தன் தாய் வீட்டில் இருந்த படி வேலைக்கு சென்றுள்ளார். வேலைக்கு சென்ற இடத்தில் அங்கு ஒரு இளைஞருடன் காதல் ஏற்பட்டு அவருடன் தொடர்பு வைத்து வந்துள்ளார். இதனை அறிந்த திவ்யா பெற்றோர், குழந்தைக்கு தாயான பின் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் இப்படி கள்ளக்காதல் கூடாது என்று திவ்யாவுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.
மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து குழந்தையின் தாய் திவ்யாவிடம் விசாரணை செய்தபோது, திவ்யா முரண்பாடன பதில்களை கூறியுள்ளார்.