அனைத்து தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு மற்றும் உரிமைகள் வழங்குவதில் உள்ள பாகுபாட்டை களைவதற்கு உணர்வூட்டும் பயிற்சி திட்டம் மாவட்டம் தோறும் நடத்த அரசு 11,20,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் வி. சரோஜா கூறியுள்ளார்.
மேலும், அகில இந்திய குடிமைப் பணிகள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 1 முதலான தேர்வுகளில் வெற்றி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.