இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சமுதாய கூடங்களிலும், அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு, உடை மற்றும் பாதுகாப்பு போன்ற தேவைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும்.
மத்திய அரசு தமிழகத்திற்கு நிவாரணமாக வழங்கியிருக்கும் தொகை முதல் தவணையாக மட்டுமே இருக்க வேண்டும். தமிழகத்திற்கு ஒரு குழுவை உடனே அனுப்பி, பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்து வேண்டும். மேலும், தமிழகத்திற்கு தேவையான முழு நிவாரண தொகையை காலதாமதமின்றி வழங்க முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.