ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைப்பெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தினகரன், தீபா, ஓபிஎஸ் என அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஆர்.கே.நகரில் வாக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளருக்கு பணம் கொடுப்பது போன்ற வீடியோ, சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.