மோடி உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று வர வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்

செவ்வாய், 19 மே 2015 (17:43 IST)
பிரதமர் நரேந்திர மோடி உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று வர வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 
இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், ”நாட்டை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றால், பிரதமர் அனைத்து நாடுகளுக்கும் செல்ல வேண்டும். 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று வர வேண்டும்.
 
உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை ஏற்றுக் கொள்ளும் நிலையை ஏற்படுத்த வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்