பாரபட்சமில்லாம ஒரே அளவில் தொகுதி ஒதுக்கீடு! – மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு!

திங்கள், 8 மார்ச் 2021 (13:27 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் தொடங்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைப்பதாக சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி தெரிவித்திருந்தது. இந்திய ஜனநாயக கட்சியும் ம.நீ.மவுடன் கூட்டணிக்கு ஒப்புதல் தெரிவித்தது.

அதை தொடர்ந்த கூட்டணி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 34 தொகுதிகளும், ஐ.ஜே.கேவுக்கு 34 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்