தஞ்சாவூரில், மக்கள் நலக் கூட்டணி சார்பில் பொது மக்கள் சந்திப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் காட்டாச்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியை அகற்றுவே எங்கள் நோக்கம். ஆனால், இந்த நோக்கத்தை பயன்படுத்தி, சிலர் சுயநலமாக பதவியில் அமர ஆசைப்படுகின்றனர். அது நடக்கவே நடக்காது.
ஏன், இன்னும் வெளிப்படையாக சொன்னால், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் துடிக்கின்றார். அவர் முதல்வராக என்ன தகுதி உள்ளது. எந்த தகுதியும் இல்லை. அப்படிப்பட்ட நபர் முதல்வர் வேட்பாளர் என்றால் இதைவிட கோவலம் உலகத்திலேயே இல்லை.