சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்! – அமைச்சர் எச்சரிக்கை!

புதன், 29 டிசம்பர் 2021 (10:37 IST)
இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் சென்னையிலும் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில வாரங்களில் மெல்ல குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. வழக்கமான கொரோனா மற்றும் வீரியமடைந்த ஒமிக்ரான் பரவல் இரண்டுமே அதிகரிக்க தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா குறித்து பேசியுள்ள மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “கொரோனா தொற்று இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் சென்னையிலும் அதிகரித்துள்ளது. சென்னை அசோக் நகரின் எல்.ஜி.ஜிஎஸ் காலணி பகுதியில் சிலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். 17வது தடுப்பூசி முகாம் புத்தாண்டிற்கு அடுத்த நாள் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்