தமிழ்நாடே தயாராக உள்ளது… ஆனால் தடுப்பூசிதான் இல்லை – அமைச்சர் மா சுப்ரமண்யன்!

திங்கள், 28 ஜூன் 2021 (16:15 IST)
இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் தமிழக மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழகம்  முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு துரிதமாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் ‘தமிழ்நாடே தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக உள்ளது. ஆனால் தடுப்பூசிதான் இல்லை. 1.44 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை 1.41 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. கையிருப்பு 2 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன. அதுவும் இன்றுக்குள் முடிந்துவிடும்’ எனத் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்