10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (15:23 IST)
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத்தேர்வு உண்டு என பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்து இருந்த நிலையில் பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 
 தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் தினமும் 600 க்கும் கீழ் தான் பாதிப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அனைத்து தேர்வுகளும் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 10 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார் இதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்