அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொடைக்கானலில் சுற்றுச்சூழல் விதிமுறையை மீறியதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் 2001 ஆம் ஆண்டு மூடப்பட்ட ‘இந்துஸ்தான் யூனி லீவர்’ நிறுவனத்தின் தெர்மா மீட்டர் தொழிற்சாலையின் பாதரச கழிவுகள் தொழிற்சாலை வளாகத்திலும், அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பகுதிகளிலும் பரவி மாசடைந்துள்ளது.
இந்த நச்சுதன்மையால் மனிதனின் மூளை மற்றும் சிறுநீரகத்துக்கு பாதிப்பு ஏற்படும். தண்ணீர் மற்றும் காற்று மூலமாக பாதரச கழிவுகள் பாம்பர் சோழ வனப் பகுதியில் உள்ள வைகை நீர்த்தேக்கம், கொடைக்கானல் ஏரிக்கு பரவும் அபாயம் உள்ளது.