ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடப்போவதில்லை: வைகோ அறிவிப்பு

புதன், 21 ஜனவரி 2015 (12:39 IST)
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடப்போவதில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது திமுகவின்  வேட்பாளரை, பொது வேட்பாளாராக ஏற்று அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளது பற்றி செய்தியாளர்கள் வைகோவிடம் கேள்வி எழுப்பினர்.
 
அப்போது பதிலளித்த வைகோ, ஸ்ரீரங்கம் தொகுதியில் மதிமுக போட்டிப்போவதும் இல்லை. எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதும் இல்லை என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்