மக்கள் நலக் கூட்டணியுடன், தேமுதிக கூட்டணி சேர்ந்தது தவறு என்றும், திமுகவுடன் கூட்டணி வைப்பதே சிறந்தது என்று குரல் எழுப்பி, தேமுதிகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டவர் சந்திரகுமார்.
அவர் தற்போது, மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அவருக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில், திமுகவில் இணைவதற்கு அழைப்பை விடுத்தார். அதனை ஏற்று, இன்று மாலை அவர் கருணாநிதியை சந்தித்தார்.