இந்நிலையில், மதுராந்தகம் ஏரி உடைந்து விட்டதாகவும், இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் தகவல்களைப் பரப்பினர்.
இதனால் அப்பகுதி மக்கள் கடுமையான அச்சத்திற்கு உள்ளாயினர். இத்தகவலை அறிந்த மதுராந்தகம் பொதுப்பணித் துறை அதிகாரிகள், இது தவறான தகவல் என்றும் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினர்.
மேலும், உபரி நீர் வெளியேற்றப்படுவதன் மூலம் 12 கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது என்றும் அப்பகுதி பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனறும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.