கோவைக்கு வருகிறார் மாதா அமிர்தானந்தமயீ

சனி, 6 பிப்ரவரி 2016 (02:00 IST)
பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று கோவைக்கு மாதா அமிர்தானந்தமயீ வருகைதர உள்ளார்.
 

 
கோவை நல்லாம்பாளையத்தில் உள்ள மாதா அமிர்ந்தானந்தமயி மடத்தின் பிரம்மஸ்தானத்தில் பிப்ரவரி 13 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி அன்று கோவில் விழா நடைபெறுகிறது.
 
கோவில் விழாவில், ஸ்ரீலலிதா சஹஸ்ர நாம அர்ச்சனை, சத்சங்கம், பஜனை, தியானம், தோஷ நிவாரண பூஜைகள், தரிசனம்,சனி தோஷ நிவாரண பூஜை ஆகியவை நடைபெறுகிறது.
 
இந்த விழாவில் கலந்து கொள்ள கேரளாவில் இருந்து மாதா அமிர்தானந்தமயீ வருகைதர உள்ளார். மேலும், இந்த கோயில் விழாவில் கோவையை சுற்றியுள்ள
பகுதிகளில் இருந்து சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இதனால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்