இது குறித்து, நாககோவிலில், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
தமிழக சட்டப் பேரைவியில், 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களில் கூட 10 ல் ஒரு சதவீதம் திட்டங்கள் கூட நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 83 ஆணவ கொலைகள் நடந்துள்ளன. அதிமுக அரசு அறிவித்த எந்த திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்றவில்லை.
தமிழகத்திலும், கேரளாவிலும் ஒரு நிலைப்பாட்டையும், மேற்கு வங்காளத்தில் இன்னொரு நிலைப்பாடும் எடுத்துள்ளனர். எனவே, அவர்களுக்கு இக்கூட்டணியை விமர்சிக்க தகுதி இல்லை என்றார்.