ஓ.பனனீர்செல்வம் ராஜினாமா செய்த இரண்டு நாட்களில் சசிகலாவுக்கு எதிராக களம் இறங்கினார். அதைத்தொடர்ந்து சசிகலா, ஓ.பி.எஸ்., என இரண்டு அணிகள் ஆட்சியமைக்க போராடி வந்தனர்.
இந்நிலையில் மார்கண்டேய கட்ஜூ தனது டுவிட்டர் பக்கத்தில், இனி அரசு சிறையில் இருந்து செயல்படும் என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்ந்தெடுத்து அதிமுக மரண பாதையை முடிவு செய்துள்ளது. மறுதேர்தல் நடந்தால் திமுக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.