நாகை வெளிப்பாளையத்தில் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் மடம் அமைந்துள்ளது.
ம்ருத்திகா பிருந்தாவனத்திற்கும்ஸ்ரீ ஆதிசக்தி மாஞ்சாலியம்மன் ஆலயத்திற்க்கும் மந்த்ராலய பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் வருகைதந்து சிறப்பு பூஜை நடத்தி வைத்தனர்.
இதனை தொடர்ந்து தியான மண்டபத்தில் அமர்ந்து ஸ்ரீ ராகவேந்திரா பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.