3 இளம்பெண்களை மாறி மாறி பலாத்காரம் செய்த தந்தை உருவில் வந்த வெறியன்

திங்கள், 27 ஜூன் 2016 (10:56 IST)
சென்னை ராயப்பேட்டையில் தாய் மற்றும் மூன்று இளம்பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சின்னராஜ் என்பவர் அந்த இளம் பெண்களை மாறி மாறி பலாத்காரம் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.


 
 
சென்னையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்டது போல், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மற்றொரு சம்பவம் ராயப்பேட்டையில் ஒரே வீட்டில் தாய் மற்றும் 3 இளம்பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம்.
 
சென்னை ராயப்பேட்டை பழைய போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள முத்து தெருவை சேர்ந்தவர் சின்ராஜ். இவர் மனைவி பாண்டியம்மாள் (38)., பரிமளா (18), பவித்ரா (18), சினேகா (16) ஆகிய 3 மகள்களுடன் வசித்துவந்தார். கடந்த சில தினங்களாக இவர்களது வீடு பூட்டியே இருந்தது. வீட்டின் உரிமையாளர் சீனிராஜிடம்  கேட்டபோது பதிலேதும் கூறாமல் வெளியே சென்றாராம்.
 
இந்நிலையில் சின்ராஜ் வீட்டில் இருந்து திடீரென்று துர்நாற்றம் வீசியது. இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
உடனே விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் பாண்டியம்மாள், அவரது மகள்கள் பரிமளா, பவித்ரா, சினேகா ஆகிய 4 பேரும் இறந்துகிடந்தது தெரியவந்தது. மேலும் அவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது. பிணங்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. சின்ராஜ் பாண்டியம்மாளின் கணவர் கிடையாது. அதாவது, பாண்டியம்மாள் அவரின் கணவரை பிரிந்து காரைக்குடியில் வாழ்ந்து வந்துள்ளார். அப்போதுதான் அவருக்கு சின்ராஜுடன் பழக்கம் ஏற்பட்டது.
 
இவர்கள் கணவன் மனைவி போல் சென்னையில் மூன்று மகள்களுடன் வசித்துவந்தனர். அப்போது சின்னராஜை பாண்டியம்மாளின் மகள்கள் அப்பா என்றே அழைத்து வந்தனர். சின்னராஜும் அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்து பாசமாக இருந்து வந்துள்ளார்.
 
தினமும் பாண்டியம்மாளுடன் உடலுறவில் ஈடுபட்டு வந்தார் சின்னராஜ். இந்நிலையில் பாண்டியம்மாளுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக சின்னராஜை உடலுறவுக்கு அனுமதிக்கவில்லை. இதனால் தன் உடல் பசியை அடக்க முடியாமல் வெறியனாக மாற ஆரம்பித்த சின்னராஜின் பார்வை அந்த மூன்று மகள்கள் மீதும் திரும்பியது.
 
இந்நிலையில் மகள்கள் உடைமாற்றுவது, குளிப்பதை மறைந்திருந்து வெறிகொண்டு பார்த்துள்ளான் சின்னராஜ். மேலும் பாண்டியம்மாளின் மூத்த மகள் பவித்ராவை அடைய நினைத்த சின்னராஜ் அவளை திருமணம் செய்து வைக்க பாண்டியம்மாளிடம் கேட்டுள்ளான். இதனால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.
 
இந்நிலையில் சின்னராஜ், பவித்ராவிடம் இரட்டை அர்த்தங்களில் பேசுவது, தவறாக நடக்க முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான். இதனை பவித்ரா தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து பாண்டியம்மாள் சின்னராஜை இரவு நேரங்களில் வீட்டில் அனுமதிக்காமல் வெளியே அனுப்பியுள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த சின்னராஜ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மூத்த மகள் பவித்ராவை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது தடுக்க வந்த பாண்டியம்மாளை உலக்கையால் தலையில் அடித்து தாக்கியுள்ளார்.
 
பின்னர் மூன்று மகள்களையும் மாறி மாறி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான், இதனை தடுக்க முயன்ற தாய், மகள்களை உலக்கையால் மாறி மாறி தாக்கி கொலை செய்துள்ளான். பின்னர் சின்னராஜ் அவர்கள் இறந்த பின்னர் மூன்று மகள்களின் ஆடையையும் களைந்து அவர்களுடன் உடலுறவு கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
 
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இது குறித்து உறுதியாக சொல்ல முடியும். இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தக்கல் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்