விருதுநகர் அரசு மருத்துவமனையில் காவல் கட்டுப்பாடு மையம் உள்ளது. காரியாபட்டி, மாந்தோப்பு மோதலில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர், அங்கு பாதுகாப்பு பணியில் ரமாபிரபா, அனுசுயா, உதயகுமார் ஆகியோர் இருந்தனர்.
நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் ரமாபிரபா, அனுடியா ஆகியோர் அங்குள்ள செவிலியர் அறையில் படுத்து உறங்கி ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது ரமாபிரபாவின் உடை விலகி இருந்துள்ளது, இதனை பார்த்த ஆண் காவலர் உதயகுமார் செல்போனை எடுத்து ரமாபிரபாவை பல்வேறு கோணங்களில் ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளார்.