மதுரையில் உள்ள உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள சென்ட்ரல் மார்க்கெட் மிகஅருகில் காலி இடம் உள்ளது. இதன் சுற்றச்சுவர் அருகே மிகசத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த மக்கள் இது குறித்து, உடனே காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசார் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு மர்மந பர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியிருப்பது தெரிய வந்தது. மேலும், அந்த பகுதியில் உள்ள கழிப்பறை அருகே சோதனை செய்த போது, வெடிக்காத இரண்டு பெட்ரோல் குண்டுகளை கைப்பற்றியுள்ளனர்.