சென்னைப் பல்கலைக்கழகம்: அரசியல் அறிவியல் துறைக்கு காலவரையற்ற விடுமுறை

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (00:43 IST)
சென்னைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் துறைக்கு காலவரையற்ற விடுமுறையை அறிவித்துள்ளது.
 

 
சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் பொறுப்புத் தலைவராக ராமு. மணிவண்ணன், கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். ஆனால், கடந்த 7ஆம் தேதி, அவரை  தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பேராசிரியர் கோடீஸ்வர பிரசாத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
 
இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் பொறுப்புத் தலைவராக ராமு.மணிவண்ணனை மீண்டும் அதே பொறுப்பில் பணியமர்த்தக் கோரி, அந்தத் துறையின் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
 
இதனால், அரசியல் அறிவியல் துறைக்கு காலவரையற்ற விடுமுறையை சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம்  அறிவித்துள்ளது. இந்தத் துறையைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது விடுதி அறைகளையும் காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
 
பேராசிரியர் ராமு மணிவண்ணன் மீதான புகார்கள் விசாரணை செய்யப்பட்டு,  விசாரணை அறிக்கை பல்கலைக்கழகத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்