நீதிபதி ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நல்லபெயரை பெற்று, ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு விலைபோவதை நம்மால் ஏற்க முடியவில்லை.என்று நீதித்துறை மற்றும் நீதிபதிகள் குறித்து சர்ச்சைகூறிய கருத்தை தெரிவித்தார். இவருடைய பேச்சு நீதிமன்றத்தை அவமதிப்பதாக கூறி சினிமா ஃபைனான்சியர் முகுன் சந்த் போத்ரா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இம்மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவு எடுக்க இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த மனு மீதான விசாரணை செய்த நீதிபதிகள் அக்னி கோத்திரி, கே.கே. சசிதரன் ஆகியோர், இம்மனுவுடன் இணைத்துள்ள அந்த நிகழ்ச்சிகுறித்த வீடியோ சி.டி.யை போட்டு பார்த்தனர். பின்னர் இம்மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று அந்த மனுவிற்கு எண்ணிட்டு, விசாரணை பட்டியலிட உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.