இதை எதிர்த்தும், தங்கள் மீதான அவதூறு வழக்குகளில் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும், விஜயகாந்தும், பிரேமலதாவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில் புதனன்று இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது, விஜயகாந்த், பிரேமலதா மீதான 14 கிரிமினல் அவதூறு வழக்குகளின் விசாரணைக்கும் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.