சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

ஞாயிறு, 6 டிசம்பர் 2015 (10:18 IST)
கனமழை காரணமாக,  சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


 

 
சென்னை, உட்பட தமிகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் தங்கள் தேர்வுகளை ஒத்தி வைத்திருந்தனர். 
 
ஆனால், மழை இன்னும் நின்றபாடில்லை, தமிழகம் மற்றும் சென்னையில் மீண்டும் அவ்வப்போது மழை பெய்து வருவதால், பல்கழைக் கழகங்கள் அறிவித்த மறு தேதிகளிலும் தேர்வுகள் நடைபெறவில்லை. 
 
மழையின் காரணமாக, டிசம்பர் 12 ஆம் தேதி வரை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என சென்னை பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்