அப்போது, தேமுதிகவுடன் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழகத்துக்குத் தேவைப்படும் கூட்டணியாக இருந்தால் இது குறித்து திமுக பரிசீலிக்கும் என்று கூறினார்.
பவானி சிங் வழக்கில் தீர்ப்பு குறித்து கருத்துக் கூறிய கருணாநிதி, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இது திமுகவுக்குக் கிடைத்த வெற்றியல்ல, நீதிக்குக் கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.