சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த் சேஷாத்ரி என்பவர், தமது நிலத்தை மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், தங்களின் பினாமி பெயருக்கு மிரட்டி வாங்கியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதையடுத்து, நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க கால அவகாசம் தேவை என மு.க.ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்ததால், நீதிபதிகள் விசாரணையை வருகிற 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.