தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க மு.க.ஸ்டாலின் ஆவல்

வியாழன், 30 ஏப்ரல் 2015 (16:58 IST)
தேமுதிகவுடன் திமுக கூட்டணி அமைந்தால் நல்லது என மக்கள் ஆவலாக எதிர்பார்க்கிறார்கள் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 
 
அதில் அவர் மேலும் கூறியபோது,
 
ஆரம்ப காலங்களில் விஜயகாந்த் திமுகவுடன் இணக்கமான நிலையிலேயே இருந்தார். ஆனால் அவர் அரசியலுக்கு வந்த பின் பல்வேறு தருணங்களில் திமுகவை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனாலும் திமுக பெரிதாக அதனை எடுத்துக் கொள்ளவில்லை. இந்த சூழலில்தான் அவர் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கருணாநிதியை சந்தித்தார்.
 
அப்போது அவர் தன் திருமண புகைப்படத்தை எடுத்து வந்து கருணாநிதியிடம் காட்டி பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார். இது அவர் மனதில் இருக்கும் நட்புச் சூழலையே காட்டுகிறது. நானும் அதே சகோதரப் பாசத்துடனே அவருடன் பழகி வருகிறேன்.
 
இந்த சந்திப்பு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைந்தால் நல்லது என பொதுமக்கள் ஆவலாக எதிர்பார்க்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. அதே ஆவல் எனக்கும் உண்டு என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்