சென்னை எம்.ஐ.டி.க்கு அப்துல் கலாமின் பெயரை சூட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகேள்

புதன், 29 ஜூலை 2015 (18:22 IST)
சென்னை எம்.ஐ.டி.க்கு அப்துல் கலாமின் பெயரை சூட்ட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 
 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அப்துல் கலாம் சென்ற நாடுகளில் எல்லாம் தமிழுக்கு பெருமை சேர்த்தவர். அவரின் நினைவாக சென்னையில் உள்ள எம்.ஐ.டி.க்கு அப்துல் கலாமின் பெயரை சூட்டவேண்டும். அவர் அடக்கம் செய்யப்படும் இடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பொதுமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்". என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்