ஸ்டாலினை முன்னிறுத்தினால் சட்டமன்றத்தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்றும், ஸ்டாலினை விட திமுகவில் கலைஞருக்குத்தான் செல்வாக்கு அதிகம் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். இதை திமுக வில் இருக்கும் ஒரு ஆண் மகனாலும் கூற முடியாது எனவும் கூறியுள்ளார்.
திமுகவில் நடக்கும் சில உண்மைகளையும், நியாயத்தையும் பேசியதால்தான் நான் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டேன். நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலினை முன்னிறுத்தியதால் வட்டம் வாங்கியது. சட்டமன்றத்தேர்தலில் முன்னிறுத்தினால் மா வட்டம் தான் திமுக வாங்கும் என மு.க.அழகிரி பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.