தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. வங்கக்கடலில் அடுத்தடுத்து, குறைந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள் ஆகியவற்றில் சராசரி மழை அளவை விட அதிகமாக பெய்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருவதால் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழையும் என்றும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.