ரயில் முன் பாய்ந்து காதலர்கள் தற்கொலை: பெற்றோர்கள் எதிர்ப்பால் விபரீத முடிவு

புதன், 13 ஜூலை 2016 (12:13 IST)
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.


 

 
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கெங்கரை தேயிலை தோட்டம் பகுதியை சேர்ந்த திவாகர்(20), ரம்யா(19) ஆகிய இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தனர்.
 
இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது, கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரம்யாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து திவாகரும், ரம்யாவும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். 
 
ஆனால் திருமணம் செய்து கொண்டால் நம்மை பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், அதனால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்து, நள்ளிரவில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். 
 
இந்த சம்பவம் குறித்து போத்தனூர் ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்  

வெப்துனியாவைப் படிக்கவும்