கோத்தகிரியில் வெஸ்ட் புருக் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதுடைய லூர்து. கூலித்தொழிலாளியான இவர், கடந்த 23.10.2010 அன்று அவரது குடியிருப்புக்கு அருகில் வசித்துவந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த வழக்கில், மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சர்வமங்கலா தீர்ப்பளித்தார். குற்றவாளி லூர்துவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.