கடலுார் பீமாராவ் நகர், கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்தையன் மகன் ராமன், [வயது 40]. கடந்தாண்டு ஜூன் 24ஆம் தேதி, தனது வீடு கட்டுமானப்பணியின்போது அந்த பகுதியில் உள்ள மனநிலை பாதித்த பெண்ணை பார்த்துள்ளார்.
அப்போது அந்த பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், தனிமையில் இருந்த, 16 வயதுள்ள மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்தனர். மேலும், பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.