பாதுகாப்பாக கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவோம்- விஜயகாந்த்

வெள்ளி, 24 டிசம்பர் 2021 (18:30 IST)
நாளை உலகமெங்கும் கிருஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில்  தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளா அறிக்கையில்,

உலகெங்கும் வாழும் கிறிஸ்துவ மக்கள் அனைவரும் ஒற்றுமையோடும், அமைதியோடும், நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும் கிறிஸ்துமஸ் பெருவிழாவை உற்றார் உறவினர்களோடும், நண்பர்களோடும் கொண்டாடும், அதே நேரத்தில்.உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா, ஒமிக்ரான் வரிசையில், புதிய வைரஸான டெல் மைக்ரான் தொற்று வேகமாக பரவுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எனவே வைரஸ் தொற்று இல்லாத சமூகத்தை உருவாக்க, பாதுகாப்பாக கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவோம் எனத் தெரிவித்துள்ளர்.

உலகெங்கும் வாழும் கிறிஸ்துவ மக்கள் அனைவரும் ஒற்றுமையோடும், அமைதியோடும், நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும் கிறிஸ்துமஸ் பெருவிழாவை உற்றார் உறவினர்களோடும், நண்பர்களோடும் கொண்டாடும், அதே நேரத்தில்.. (1-2) pic.twitter.com/2UMvbNO63o

— Vijayakant (@iVijayakant) December 24, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்