சிறுத்தை நடமாட்டத்தால் ஈரோட்டில் மக்கள் பீதி

திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (15:29 IST)
ஈரோடு மாவட்டம் அனுமான்பள்ளி என்ற இடத்தில் சிறுத்தை நடமாடுவதை பொதுமக்கள் சிலர் பார்த்துள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
 
அதிகாலையில் பால் விற்பனை செய்யும் சிலர், சாலையின் குறுக்கே சிறுத்தை கடந்து சென்றதைப் பார்த்ததாகக் கூறிய நிலையில், விவசாயி ஒருவர் சிறுத்தையின் கால்தடங்களைப் பார்த்துள்ளார்.
 
இது குறித்த தகவல் வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்