இரவு எட்டு மணிக்கு சோதனை சாவடி கதவை சாத்துவதற்காக சென்ற வனக்காவலர் கிருஷ்ணனை அங்கிருந்த சிறுத்தை ஒன்று கழுத்தை பிடித்து கடித்து குதறியது. இதனால் கிருஷ்ணனின் மரண அலரலை கேட்ட அப்பகுதி மக்கள் சத்தமிட்டனர். உடனே சிறுத்தை கிருஷ்ணன் உடலை தூக்கிக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்றது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் துப்பாக்கியுடன் வந்ததை கண்ட சிறுத்தை கிருஷ்ணன் உடலை விட்டுவிட்டு ஓடிவிட்டது.