இதனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து நியூ டெல்லி, மும்பை, திருச்சி, மதுரை, கோவை, ஐதரபாத் போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக புறப்பட்டு சென்றன.
சரியான நேரத்தில் விமானம் இயக்காததால், விமானப் பயணிகள் கடும் அவஸ்தை அடைந்தனர். இது குறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், இந்த விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள், மழை காரணமாக தங்களது வீடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. அதனாலே விமானம் இயக்க தாமதம் ஏற்பட்டது என விளக்கம் அளிதனர்.